செவ்வாய், 27 செப்டம்பர், 2016

ஆயுத எழுத்தின் சிறப்பு....!

கீழ்கண்டவாறு, தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தில் காணப்படும் 

முதற்பாடலிலேயே ஆய்த எழுத்தின் பயன்பாடு அறியப்படுகிறது....!
முதலில் இது ஆயுத எழுத்தா, ஆய்த எழுத்தா என்கிற விவாதம் தமிழ் 

மொழியை அதிகமாக கற்றவர்கள் மத்தியில் இருந்து வருகிறது...!

ஆனால், ஆய்தம் என்ற சொல்லானது ஆயுதத்தையே நேரடியாக பொருள் 

கொள்ளும். ஆய்தல் என்ற வினைப்பெயரானது அல் என்ற விகுதியைப் பெறும்: 

ஆய்தம் என்ற பெயர்சொல்லானது அம் என்ற விகுதியைப் பெறும்...!

இந்த விகுதியை  இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் பிழையற 

பயன்படுத்தியுள்ளார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை...!

எழுத்துக்களின் வகை
------------------------------------
1. எழுத்தெனப் படுப

அகரமுதல் னகர இறுவாய்


முப்பஃதென்ப


சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.


அவைதாம்,


குற்றியலிகரம் குற்றியலுகரம்


ஆய்தம் என்ற


முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன


மேலும், குமரிக்கண்டத்தில் ஓடிய ஒரு மிகப்பெரிய ஆற்றின் பெயர் 

பஃறுளியாறு என்று சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகிறது.
ஒரு போர்வீரனின் கேடயம் எஃகினால் செய்யப்பட்டு, வட்டமான தட்டு 


போன்ற  அமைப்பில் இருக்கும். அதன் ஒரு பக்கத்தில், தாங்கிப் 

பிடிக்கும் வகையில் ஒரு கைப்பிடி அமைந்திருக்கும்.

மற்றொரு பக்கத்தில் மூன்று குமிழிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் 

இருக்கும். போர் நடக்கும் சமயங்களில் இடக்கையில் உள்ள கேடயத்தால் 

பகைவனைத் தாக்கும்போது, அந்த மூன்று குமிழ்கள் போன்ற எஃகு பகுதிகள், 

பகைவனது மார்பின் மீது திரைப்படங்களில் வருவதைப் போல இடித்துத் 

தாக்கும். அவன் மார்புக்கவசம் அணிந்தவனாக இருந்தாலும், அந்த 

நொடியில் அவன் தொண்டைக் குழியிலிருந்து "ஃ" என்ற முக்கல் ஒலி தாமாக 

எழும்.! அந்த கேடயம் என்ற ஆயுதத்தில் வருவதைப் போன்ற வடிவத்தில்  

எழுதப்படுவதால், இந்த எழுத்தும் ஆய்தம் எனப் பெயர் பெற்றது. 

அந்தக் கேடயத்தால் எதிரியின் மார்பை இடித்து தாக்கும்போது, அவன் 

வாயிலிருந்து என்ன ஒலி எழுமோ, அந்த ஒலியையே அந்த எழுத்திற்கான 

உச்சரிப்பாக அமைத்து இருப்பது வியப்பை அளிக்கிறது...!.
பிற்காலத்தில் தோன்றிய பல மொழிகளில், தமிழை முன்மாதிரியாகக்

கொண்டு பல உயிரெழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் அமைக்கப்பட்டு

இருந்தாலும், இந்த ஆயுத எழுத்தின் சிறப்பை அவர்கள் புரிந்துக்கொண்டு 

இணைத்துக்கொள்ள தவறிவிட்டார்கள்....!




அதனால்தான், இதற்கு இணையான உச்சரிப்பை கொண்டதொரு (ஒற்றை) 

எழுத்தானது  பிற எந்த மொழியிலும் கிடையாது என்பது அறியப்படுகிறது.!  

அப்படி இருப்பதாக யாராவது அறிந்திருந்தால், இந்த கட்டுரையின் முடிவில் 

உள்ள உரையாடல் பெட்டியில் உங்களது கருத்தை பதிவு செய்யவும்.!

ஆனாலும் சிலர், இந்த ஆயுத எழுத்தானது மிகவும் பிற்காலத்தில்தான்

வழக்கிற்கு வந்தது ஆய்வுசெய்து எழுதியும் இருக்கிறார்கள்...! அவர்கள் எதை 


ஆய்வு செய்தார்கள், எப்படி ஆய்வு செய்தார்கள்  என்பது புரியாத புதிராகவே 


இருக்கிறது...! (அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.!)

ஆயினும், தொல்காப்பியம் எழுதப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிறது 

என்பதை நாம் அறிவோம்.! குமரிக்கண்டத்தை கடல்கொண்டு மேலும் 

பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிறது.! அங்கே ஆய்த எழுத்தை தனது பெயரில் 

கொண்டிருந்த பஃறுளி ஆறு ஓடிக்கொண்டு இருந்தது.! 

அப்படியானால், 

ஆய்த எழுத்தானது பயன்பாட்டிற்கு வந்த காலத்திற்கு முன்னரே, தமிழர்கள் 

 வாளின் பயன்பாட்டையும் கேடயத்தின் பயன்பாட்டையும் 

அறிந்திருந்தனர்  என்பதை எடுத்துக்கூறும் ஆயுதமாக இருப்பதே இந்த ஆய்த 

எழுத்தின் வியப்பிற்குரிய சிறப்பாகும்...!

4 கருத்துகள்:

  1. Arutchelvan Thiru: GD Kadatcham நான் குறைகாணும் முறையில் பதிவிடவில்லை.ஆய்த எழுத்தென்றால் ஆய்ந்து உருவாக்கப்பட்ட எழுத்து என்று பொருள்.வள்ளலார் ஆய்த எழுத்தை திருநிலைத்தனிவெளி என்கிறார்.உயிரெழுத்து ஆணெழுத்து.மெய்யெழுத்து பெண்ணெழுத்து.ஆய்த எழுத்து அலி எழுத்து.பிற ஒலிகளெல்லாம் தொண்டைக்கு கீழிருந்து எழும்.ஆனால் ஆய்த ஒலி உச்சந்தலையிலிருந்து வரும்.இன்னும் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கா என்ற உச்சரிப்பிற்கு் காகத்தின் தலையையும், கீ என்ற உச்சரிப்பிற்கு் கிளியின் தலையையும், எளிதில் புரிந்துக்கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக மாற்றி எழுதிய போதுதான் எழுத்துகள் உருவாகி இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...(இதையும் மிகப்பழமையான எழுத்துக்களை ஆய்வு செய்து பார்த்தால் நிரூபித்து காட்ட முடியும்.) அந்த அடிப்படையில்தான், நான் இதை ஆய்ந்து கண்டுபிடித்த எழுத்தல்ல...ஆயுதத்தில் இருக்கும் குறியீட்டை கொண்ட எழுத்து என்று நம்புகிறேன்...

      நீக்கு
  2. Arutchelvan Thiru: "GD Kadatcham இது இறையை உணர்த்தும் எழுத்து.திருவடி,சுழிமுனை இவற்றைக்குறிக்கும் எழுத்து"

    பதிலளிநீக்கு

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!