வியாழன், 5 ஜூன், 2014

எல் இ டி. விளக்கொளியிளிருந்து இன்டர்நெட் பெறலாம்...!

லை-பை என்றால் என்ன?

இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி தேவையே இல்லை புதிய தொழில்நுட்ப கருவியை சீனா விஞ்ஞானி ஒருவர் கண்டுபடித்துள்ளார். உங்கள் வீட்டில் உள்ள பல்பு எரிந்தால் போது, அதன் மூலமே இன்டர்நெட் வசதியை பெறலாம். இந்த தொழில்நுட்பத்திற்கு லைபை (li-fi) என பெயரிட்டுள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் எல்லா வகையான சாதனங்களிலும் இன்டர்நெட் வசதியை பெறலாம். ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ நின்று விடும்.

 


விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த ‘லைபை’ குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார்.


லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு வாட் பல்பை வைத்து சீனா விஞ்ஞானி இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது.
சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘லைபை’க்கு மாறி விடுவார்களாம். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!