புதன், 18 ஜூன், 2014

உலகின் முதற்கடவுள் ஆதிசிவனார்...!

உலகின் முதற்கடவுள் ஆதிசிவனார்...!
ஏறத்தாழ எழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இலெமூரியா கண்டத்தில் வாழ்ந்த தமிழர்களால் வணங்கப்பட்டவர் என்று வரலாறு கூறுகிறது. அவரை வணங்க ஆரம்பித்த காலம் அதிலும் சொல்லப்படவில்லை.
மொழி என்பது கருத்துபகிர்வுக்காவே உருவானது. ஒன்றிலிருந்து மற்றொன்று உருவானது. பிறகு உருவானதும் பிரிந்து தனித்துவமானது. இதில் உயர்வென்றும், தாழ்வென்றும் போரிடுவதால் மனித இனம் கீழ்மைப்பட்டுப் போகிறது. முதலில் தோன்றிய மொழியாகிய தமிழில் தமிழர்க்கென்று முதலில் தோன்றிய மதமும் ஒன்று இருந்தது. சிவன் என்றால் கடவுள் என்ற பொருளில் அன்பையும், ஒழுக்கத்தையும், சமத்துவத்தையும் கற்பிக்கின்ற ஒரு மதமாகவே அது இருந்தது. மனிதன் உலகம் முழுவதும் பரவியபோது இந்தக் கொள்கைகளே உலகில் தோன்றிய எல்லா மதங்களுக்கும் அடிப்படை ஆனது. ஆனால், பிற்காலத்தில் பல்விதமான கொள்கைகள் ஊடுறுவியதன் காரணமாக இந்த உண்மையான தமிழர் மதமானது சீரழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், இன்றளவும் குரு வழியாய் தோன்றிவந்த சிவனடியார்கள் மட்டும் இந்தக் கொள்கைகளிலிருந்து மாறாமலிருப்பது வியப்புக்குறியதே...! 
இராமேசுவரத்தில் இராமர், இலட்சுமணர், அனுமார், போன்றவர்கள் சிவனை வழிபடுதல்.

"சித்தமெல்லாம் எமக்கு சிவமயமே...!"
என்றுகூறிய சித்தர்கள் வாழ்ந்த நாடு..
நம் பண்டைய தமிழர் நாடு. . இந்த தமிழ் சித்தர்கள் கண்டுபிடித்த யோகம், மருத்துவம், தத்துவஞானம் போன்றவைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பலரால் பதிப்புரிமையுடன் பயன்படுத்தப்பட்டு வருவது நாம் அறிந்ததே.
அவைகளில் காணாமல் போய்விட்டது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிற நூல்களும் இரகசியமாய் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கலாம் என்றும், அவற்றின் உதவியுடன் மேலும் பல விளக்க நூல்கள் எழுதப்பட்டு இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.


பழந்தமிழர் கூறும் இறைவன்: 

சைவ சித்தாந்தம் கூறும் மூன்று உண்மைப் பொருள்களுள் இறைவனும் (பதி) ஒன்று. அவன் அறிவு வடிவமானவனும், எங்கும் நிறைந்திருப்பவனும், எல்லாவல்லமையும் உடையவனும் ஆவான் என்பதும்; படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களை அவன் புரிகிறான் என்பதும் சைவ சித்தாந்த மரபு. இந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பின் வரும் அடிகளில் எடுத்து ஆளப்படுகின்றன.
  • மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
  • ஆக்கம் அளவு இறுதி இல்லாய்
  • விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே
  • அளவிலாப் பெம்மானே
  • தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
  • போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
  • அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் 
 மோனசித்தர் உரை:           
 உதாரணமாக மோனசித்தர் அவர்களின் படமும் கூற்றும் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.



"தெய்வம் உண்டென்று இரு ! தெய்வம் ஒன்றென்று இரு !
தெய்வம் அது சிவமே என்று இரு! தெய்வம் சிவத்தை தவிர வேறெதுவும் நிலை இல்லை என்று இரு! தெய்வம் சிவத்துள் நீ என்றென்றும் நிலையாய் நிலைத்திரு! தெய்வம் சிவமே உமக்கு கருணை,அருள்,ஆசி,அன்பு,பாதுகாப்பு என்று இரு!"

"சிவபெருமானின் நட்பு வேண்டுமா, சிவபெருமானின் அன்பு வேண்டுமா,. சிவபெருமானின் கருணை வேண்டுமா, சிவ பெருமானின் ஆசியும் அருளும் வேண்டுமா, உங்கள் உள்ளத்துள் இருக்கும் சிவத்தை நலமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த சிவம் உங்களை வெளியில் நலமாக வைத்து கொள்ளும். உங்கள் உள்ளத்துக்குள் இருக்கும் சிவத்தை நலமாக வைத்து கொள்ளாதவரை உங்களை அந்த சிவம் வெளியில் நலமாக வைத்து கொள்ளது."


"அதனால் மக்களே உங்கள் உள்ளத்து சிவனை நலமாக வைத்து கொள்ளுங்கள்.இதுவே சிவவேதம்.சிவ உண்மை.சிவவாக்கு, சிவ சத்தியம்,சிவ வெளிச்சம்.இருள் நீங்கி சிவ அருள் பெருக. உங்களுக்குள் நீங்கள் மலருங்கள்.மலர்ந்து மனம் வீசுங்கள்.நீங்கள் மலர்ந்து மணம் வீசி மற்றவரையும் மலர செய்து மனம் வீச செயுங்கள்."


உங்கள் மலர்ச்சி எம்பருமான் சிவனாரின் மலர்ச்சியாக இருக்கட்டும்.உலெகெங்கும் சிவத்தை மலர செய்வோம்,செய்யுங்கள் ! 


இந்த பூமியில் மனிதனாக பிறந்து வாழ்வது எம்பருமான் சிவனை தரிசித்து அவன் திருவடிக்கு பணி செய்வதே எல்லா மனித உயிருக்கும் நோக்கமாக இருக்க வேண்டும். இறைவன் சிவத்தை அடைய வேண்டியபல நல்ல வழிகள் உள்ளன. அவை உங்களுக்கு இறையருளால் அறிவிக்க படும்"


ஆதி தமிழர்கள் சிவன் என்கிற வார்த்தையை இறைவன் என்கிற பொருளில் மட்டுமே இயம்பினார்கள். அன்பே சிவம் என்றும் உரைத்தனர். ஈசன் என்பதும், ஈசுவரன் என்பதும் இறைவனை குறிக்கும் சொற்களாகும்.


தமிழ்நாட்டில் அதிகமானவைகளும், மிகப்பழமையானவைகளும் சிவன் கோவில்களே ஆகும். இருந்தாலும், 274 கோவில்கள் மட்டுமே பாடப்பட்ட சிவஸ்தலங்கள் என்ற சிறப்பைப் பெற்றிருக்கின்றன.  திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் வாழ்ந்திருந்த காலமாகிய 7, 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் இந்தக் கோவில்களைப் பற்றியும், கோவில்களில் குடி கொண்டுள்ள சிவபெருமானைப் பற்றியும் பாடியுள்ளார்கள். பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்று கூறப்படும் இந்தக் கோவில்கள் எழாம் நூற்றாண்டுக்கு மிக முற்பட்டவைகள் என்பதை பாடப்பட்ட காலமே முடிவு செய்வதாக உள்ளது.


இத்தகையோராக ஆதிசிவனார் வணங்கப்பட்டு வந்த காலமானது முதற்சங்க காலத்திற்கும் முற்பட்டது என்று நம் முன்னோர்கள் எழுதிய நூல்கள் உரைக்கின்றன. முதற்சங்க காலம் என்பதோ வரலாற்று காலத்திற்கும் முற்பட்டதாக இருக்கிறது.  முதற்சங்கமானது  கடைசியாக ஏற்பட்ட கடல் மட்ட உயர்வினால் இலெமுரியாவில் மதுரை (தென்மதுரை) மூழ்கடிக்கப் பட்டதற்கும் முற்பட்ட காலம் என்பதை வரலாறும் இலக்கியங்களும் பல ஆதாரங்களுடன் உரைக்கிறது. இந்த முதற்சங்கத்தில் இறைவர்களான சிவன், முருகன், அகத்தியரும் அங்கத்தினர்களாக இருந்து தமிழ் வளர்த்துள்ளனர்.


 ஜலத்தினால் ஒரு உலகமே அழிக்கப்பட்ட வரலாற்றை கிருஸ்தவர்களின் வேதமானது நோவாவின் காலத்தில் ஏற்பட்ட உலக அழிவாக தெளிவாக உரைக்கின்றது. அதற்கான விஞ்ஞான, வரலாற்று ரீதியான ஆதாரங்களும் இருப்பதால் அது பைபிளில் கூறப்படும் மிகப்பெரிய உண்மையாக கருதப்படுகிறது. 



இவ்வாறு ஜலத்தினால் அழிந்துபோன உலகம் (உலகமாக கருதப்பட்ட இலமுரியா கண்டம்) அழிவதற்கு முன்பாகவே அங்கே அன்பின்வடிவான ஒரு ஆதி கடவுள் வணங்கப்பட்டு வந்ததாக தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றது. உண்மையில், அவர்களுக்கு தெரிந்த உலகமும் முழு உலகமும் அழிக்கப்படாமல் அதிலும் இறைவனின் சித்தத்தால் காப்பாற்றப்பட்ட இனமே இன்றைய தமிழர்கள் ஆவார்கள். பனிமலைகள் உருகியதால் உலகின் கடல்மட்டம் உயர்ந்து உலகின் பெரும்பாலான நிலப்பரப்பு மூழ்கடிக்கப்பட்டு விட்ட காலமே உலகம் அழிந்த காலமாக வேதத்தில் கூறப்படுகிறது. அதன்காலம் கி.மு. 7500 க்கு முற்பட்டதாகும். இதை ஒப்பு நோக்கினால் முதற்சங்க காலமும் அதற்கு முற்ப்பட்ட காலமாகவே இருக்கலாம். இன்றைய DNA ஆய்வியலாளர்கள் தமிழ்களுடைய DNA 60,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று நிரூபணம் செய்வதை ஒப்பு நோக்கும்போது இது வியப்பிற்குரியதல்ல.


மேற்கண்ட இந்த உண்மைகளுடன் கூடுதலாகவும் இந்துமா கடலின் அடியில் இருக்கும் இலெமுரியா கண்டத்தினை அராய்ந்து பார்க்குமளவிற்கு விஞ்ஞான தொழில்நுட்பம் முன்னேற்றமடையும் போது நிச்சயமாய் தெரியவரும் என்பதில் சந்தேகமே இல்லை.


 சித்தர் ஒருவரின் பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 "மட்டையுரித்து நாரையெடுத்து  மருவோட்டை
பட்டென்றுடைத்துப பருப்புடன் இளநிர் பெறுமாபோல்

சட்டை வேளுத்துச் சக்தி யெழுப்பி -தணலாக்கி

துட்ட மத்தின் துள்ளலடக்கித் -துரியான்ம
நிட்டை யிருத்திப் பரசிவநேச -நெருப்பாகி
சுட்ட பசும்பொன் சோதிதுலக்கிச் -சுடர்சோம
வட்ட நறுந்தேன் வாரியருந்தும் -வரமீவாய்
எட்டு நிலைக்கும் இன்பமளிக்கும் -பரமாத்மா ..." ஒரு சித்தரின் பாடல்.

சித்தர்களின் யோகரகசியம் இப்பாடலில் விளக்கப்படுகிறது
அந்தக்கரண சுத்தி எனும் உள்நிலை தூய்மை பெறுவதற்கு
பேராசை ,கோபம் ,வெறுப்பு ,உயர்வு ,தாழ்வு மனப்பான்மை ,வஞ்சம் போன்ற
அசுத்தமான உணர்வுகளை தேங்காய்நார் உரித்து ஓட்டைப் பிளப்பது போல் உரித்துக் களைந்து எரிய வேண்டும் ..

உள்நிலைத் தூய்மையாகிய அந்தக்கரண சக்தியே சட்டை வெளுத்தல்.

அதில் தியானித்தால் யோகக்கலை பிறக்கும் .யோகக்கலை மன இருளை அகற்றும் .தேங்காயின் பருப்பு ஜீவாத்மா ,இளநிர் பரமாத்மா ..இளநிரின் தன்மையே தேங்காய் பருப்பின் தன்மை ..இளநிர் பருப்பில் இறங்கி விட்டால் பருப்பு கொப்பரை ஆகி தனித்து பிரிகிறது .ஜீவன் பரமாத்ம சக்தியை பருகினால் ஒட்டும் பற்று நீங்கித் தானே தானாகிறது. இதை அங்கலிங்க ஐக்கிய சக்தி என்பார்கள் ...
(--நன்றி --படித்த புத்தகம் ''சித்தர் களஞ்சியம் ''- ஆசிரியர் யோகி கைலாஸ்நாத்)

தமிழர்களின் சிவமத தத்துவங்கள் எவ்வளவு உயர்வானவைகளாக இருக்கிறதென்று பாருங்கள். இவற்றிற்கும் உயர்வு தாழ்வுகளை அடிப்படையாக்குகிற இந்து மதத்தின் வருணாசிரமாவிற்கும் மலையளவு வேறுபாடு இருப்பதை ஒப்பிட்டு பாருங்கள்.


மேலும் காண:
http://valuable-information.blogspot.in/p/blog-page_4.html
http://valuable-information.blogspot.in/2014/05/blog-post_298.html
 http://valuable-information.blogspot.in/2014/06/blog-post_11.html
 http://valuable-information.blogspot.in/2014/05/blog-post_9118.html
http://www.kailashmansarovaryatras.in/about-lord-shiva/
http://www.shivatemples.com/tindex_t.php
http://shivamupdate.blogspot.in/2013/05/lord-shiva-picture-for-maha-shivaratri.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!