புதன், 28 மே, 2014

அத்திப்பழதின் மருத்துவ குணங்கள்!





  1. தினசரி இரண்டு பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும், உடல் கவர்ச்சி கரமாக வளரும். முழு அளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.
  2. மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம், நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
  3. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை வினிகரில் ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
  4. இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம்,பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
  5. உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும். மூட்டுவலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழத்தை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள் சீமை அத்திப்பழம் வெண் குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண் புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.

அத்தியின் பாலானது இரும்புச்சுவை கொண்ட விழுப்புண்களை ஆற்ற பயன்பட்டதாக சங்ககாலப் பாடலில் ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதை சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிட்டு எழுதுகின்றது. இது அனுபவபூர்வமான உண்மையாகும். நமது முன்னோர்கள் மிகப் பழங்காலத்திலேயேஉலோகத்தால் ஆன ஆயுதங்களை பயன்படுத்தியதோடல்லாமல், அதனால் ஏற்ப்படும் காயங்களுக்கும் சிகிச்சை முறைகளை அறிந்து வைத்திருந்தார்கள்.
குறிப்பு:அத்தியை பதப்படுத்தி உண்ண வேண்டும். அத்தி பழத்தை அறுத்தால் அதற்குள் சிறிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். அதனால் பதப்படுத்தி உண்பது நல்லது.
http://tamizhankural.com/benefits-of-figg-athipalam-in-tamil/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!